Blogger Widgets

புத்தம் புதுசு
வருகை தந்தமைக்கு மிக்க நன்றி. தமிழ் மொழியில் முழுமையான ஒரு விஞ்​ஞான தொழில்நுட்ப இணையத்தளத்தை தருவதற்கான இரு கன்னி முயற்சியே இது. தயவுசெய்து உங்கள் ஆதரவுகளை தொடர்ந்து வழங்குங்கள்.

Thursday, April 16, 2015

கப்பலில் ஆவிகள் உலவும் திகில் மர்மம் பகுதி 01

“RMS குயின் மேரி  இது டைட்டானிக் கப்பல் கட்டப்பட்டுவதற்கு முன்பே கட்டப்பட்ட பிரம்மாண்ட கப்பல். இது இப்போது கலிபோர்னியாவின் லாங் பீச் கடற்கரை மணல் திட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட ஹோட்டல்.

இந்த கப்பலில் இரவு தங்கும் சூயுட்ஸ்கள்(365) , டைனிங் ஹால்கள், பங்விட் [Banquet ] எனப்படும் இரவு நினைவு பார்டிகள், வரலாற்று தேடல்களுக்கான சுற்றுலா, எல்லவற்றிற்கும் மேலாக ஆவி மற்றும் பிசாசு அனுபவங்களை பெற அழைப்பு விடுக்கிறார்கள். இந்த ஹோட்டலுக்கு ஆண்டுக்கு 1.4 மிலியன் பேர் வந்து செல்கிறார்கள்.



ஹவுண்டேட் பகுதியாக சொல்லப்படுகிற இந்த பிரம்மாண்ட கப்பல் குறித்த தகவல்களை காண்போம்.

ஜான் ப்ரெளண் கம்பெனி (ஸ்காட்லாந்து) மற்றும் குனார்ட் ஸ்டீம்சிப் நிறுவனத்தால் பொருளாதார நெருக்கடியினால் முக்கால் பாகம் கட்டி முடிக்கப்பட்டு ஒன்பது தளங்கள் கொண்டு முழுமையாக முடியாத நிலையில் 1931 ல் இருந்தது, பின்னர் இந்த நிறுவனம் வைட் ஸ்டார் லைன் கம்பெனியுடன் இணைந்து இந்த கப்பலை 1936 ல் உருவாக்கினார்கள்.

இந்த வைட் ஸ்டார் லைன் தான் புகழ் பெற்ற டைட்டானிக் கப்பலை நடத்தி வந்த நிறுவனம். அதனுடைய சாயல்கள் இந்த கப்பலில் பார்க்கலாம்.

அதை விடவும் இது பெரியது. இந்த பிரம்மாண்ட கப்பலின் நீளம் 1019.5 அடி, உயரம் 181 அடி புகைகூண்டு வரை,எடை 81,237 டண்கள், இதன் எஞ்சின் 1,60,000 குதிரைதிறன் கொண்டது . 3000 பேர் சொகுசாக பயணிக்கலாம்.இக்கப்பலுக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் கிரே கோஸ்ட்…! “

மே 27, 1936 ல் வெள்ளோட்டத்தை துவக்கி சிறப்பித்தவர்கள் எட்டாம் எட்வர்ட் அரசர், ராணி மேரி, இளவரசி எலிசபத்,டச்சு பிரபுக்கள். 1001 அட்லாண்டிக் பயணங்களை முடித்து செப்டம்பர் 19, 1967 ல் ஓட்டத்தை நிறுத்தியது அதாவது 31 வருடங்கள் உழைத்தது.இதனுடைய பெரிய உருவம் காரணமாக பனாம கால்வாய் வழியாக செல்ல முடியவில்லை.

அமானுஸ்யம் மற்றும் ஆவிகள் [ஸ்ப்ரிட்] குறித்த ஆராய்சியாளர் பீட்டர் ஜேம்ஸ். 1991 இல் இருந்து இக்கப்பலில் இது பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டவர்.
அவர் இப்படி கூறுகிறார்
எனது ஆராய்சியின் படி குயின் மேரி அதித பேய்கள் நடமாட்டப் பகுதியாக கருதுகிறேன். பேய் குறித்த ஆராய்சிகள் உலகின் பல பகுதிகளில் மேற்கொண்டேன். இந்த கப்பலில் 600 பேய்கள் ஏக்டிவாக இருக்கு, அநேக துர் மரணங்கள் இந்த கப்பலில் ஏற்பட்டது காரணமாக இருக்கலாம். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் 16000 துருப்புகளை ஏற்றி இறக்கி உள்ளது. இந்தியப் பெருங்கடலின் அதிக வெப்பத் தாக்குதல் காரணமாக அதிக அளவில் இறந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை அச்சமயத்தில் ஒருமணியில் 7 நிமிடங்களுக்கு ஒருவர் இறந்ததாக நம்பப்படுகிறது.
மேலும் U.S கூட்டணி துருப்புகள் பிடித்த ஜெர்மன் மற்றும் இதாலிய போர்க்கைதிகள் இதில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். சிறைக்கொடுமைக்கு பயந்து அநேகர் தற்கொலை செய்து கொண்டனர். சரியான மருத்துவ வசதி மறுக்கப்பட்டும் பலர் இறந்தனர். [ எண்ணிக்கை தெரியவில்லை…] அந்த கால கட்டங்களில் சர்வீஸ் ராணுவத்தின் கையில் இருந்திருக்கிறது. (தொடரும்.... )

Read more ...

Monday, April 13, 2015

மின்னல் எப்படி உருவாகிறது

விண்வெளியில் நாம் ஆச்சரியபட கூடிய விடயங்கள் இன்னும் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. அவற்றில் ஒன்று தான் மின்னல் மழை காலங்களில் மின்சக்தியின் தீப்பொறி வடிவத்தை தான் மின்னல் என்போம்.








ஒரு நெருப்பு பொறி உருவாக மின்சக்தி குறிப்பிட்ட ஒரு மின்னழுத்த எல்லை யை மீற வேண்டும். மின்னல் காற்றின் மூலமாக இரு மேகங்களுக் கிடை யிலோ பூமிக்கோ கடத்தப்படுகின்றது. ஆனால், காற்று ஓர் அரிதிற் கடத்தி. சூரியனில் இருந்து வரும் கொஸ்மிக் கதிர்கள் காற்றுடன் மோதும் போது. காற்றினை அயனாக்கம் செய்து மின்னேற்றங்களை தூண்டுகிறது. சக்தி பகுப்பினால் ஏற்படுத்தபடுகின்ற மின்விளைவு மிகஅதிகம், அதாவது அதிக ளவு சக்தி காலப்படும். சிலநேரங்களில் 100 ,000 வோல்டினை விட கூடியளவு அழுத்தத்தினை உருவாக்ககூடிய சக்தி காலப்படும்.

கடல் மற்றும் ஏனைய நீர்தேக்கங்களிலிருந்து நீரானது சூரியனின் வெப்பத் தினால் நீராவி நிலைக்கு மாற்றபட்டு மேலெழுந்து மேகங்களை அடைகி ன்றது. இந்த நீராவி மேலே செல்லும் போது வளிமண்டல அமுக்கம் குறைவத னால் நீராவி விரிவடையும், இதனால் நீராவி குளிரடையும். மழை மேகத்தில் காணப்படும் அணுக்கள் உராய்வு, சூரியனிலிருந்து வரும் கொஸ்மிக்கதிர் போன்ற காரணிகளால் ஏற்றம் பெரும். முகில் கூட்டங்களில் மேல் பகுதி ஒரு வகை ஏற்றமும் கீழ் பகுதிக்கு எதிரான ஏற்றமும் பெரும். இவ்வாறு, பெரும் மின்னேற்றம் அதிகமாகும் போது எதர் எதிர் ஏற்றங்கள் கொண்ட முகில் கூட்டம் அருகருகே வரும் போது மின்னேற்றம் ஈர்ப்பு விசையால் காற்றின் வழியே மின் பாயும். இவ்வாறு பாயும் போது தீப்பொறி உருவாகும்.

மின்னலானது பூமியை நோக்கி பயணித்து மனிதர்கள், விலங்குகளையும் தாக்கும். மின்னல் பூமியினை நோக்கி கவர்ந்திழுக்கப்படும். மின்னலினால் ஏற்படும் பாதிப்பு மழைகாலங்களில் அதிகம். மின்னல் உருவாகும் போது, மரங்கள் மற்றும் குடிசைகளுக்கு கீழேயோ, அருகிலோ இருக்க கூடாது. இவை ஈரளிப்பாக இருக்கும் போது மரத்தின் உச்சியிலிருந்து அடியை நோக்கி மின்னோட்டம் பாயும், இந்த வேளையில் நாம் அருகிலோ மரத்தை தொட்ட வண்ணமோ இருந்தால் எம்மூடாக மின்னோட்டம் பாய்ந்து புவியை அடையும்.

மின்னலின் போது நிலத்தில் கிடையாக படுக்கவோ, மின்சாதன பொருட்கள், தொலைபேசி என்பனவற்றை பயன்படுத்தவோ கூடாது. நாம் காணும் அநேக மான மின்னல்கள் புவியை தொடுவதில்லை ஆனால் அவை மேகம் காற்று என தொடர்ந்து தடத்தினை அமைத்து பயணிக்கும்.

நடக்கும் போது அல்லது படுத்திருக்கும் போது அல்லது கால்களை அகற்றி வைத்திருக்கும் போது கிட்டத்தட்ட 1 மீட்டர் இடைவெளி காணப்படும் போது அழுத்த வித்தியாசம் காரணமாக மின் எம்மூடாக பாயக்கூடும். இதனால் தான் கால்நடைகள் அதிகளவு மின்னல் தாக்கத்தால் பலியாகின்றன. 

இடிமின்னலிருந்து பாதுகாப்பு பெற இடி தாங்கி பயன்படும். மாடி கட்டடங் களில் அதிகமாக இடி தாங்கி பொருத்தபட்டிருக்கும், இடி முழக்கத்திலிருந்து மின்சாதன பொருட்களை பாதுகாப்பதற்காக பொருத்தப்படுகின்றது. இங்கு மின்சாதனத்தை நோக்கி வரும் மின்னை பூமியிற்கு திசை திருப்புவதே இதன் தொழில். 

இதற்காக பூமியை நோக்கி செப்பு கம்பினை பயன்படுத்தி கொண்டு செல்லப் படும். இறுதில் தடிப்பு கூடிய செப்பு கீற்று பயன்படுத்தப்படும். இங்கு தடையை குறைக்க தடிப்பமான செப்பு பிரயோகப்படுத்துவார்கள். உச்சியில் கூர்மை யான உலோக அமைப்பு பயன்படும். ஏனெனில் கூர்மையான அமைப்பு ஏற்றங் களை அதிகளவு கொண்டிருக்கும். இலகுவாக எதிர் ஏற்றத்தை கவரும்.
Read more ...

Sunday, April 12, 2015

பேய்கள் - அதிரவைக்கும் உண்மைகள் பகுதி 2

இது இறுதிப் பதிவின் தொடர்ச்சி.... முதல் பதிவை பின்வரும் லிங்க் இல் படிக்கலாம்  http://knowledgedriv.blogspot.com/2015/04/blog-post_9.html  





* பேய்களுக்கு நேரம் காலம் தெரியாது என்றாலும், நள்ளிரவு நேரங்களில் பகலை விட கூடுதலாக அலையும். எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், சத்தங்கள் இருந்தால் பேய்கள் வராது என்று நினைப்பவர்களும் உண்டு. ஆனால், பேய்களால் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் வேகத்தையும், அதன் இயக்கத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் சக்தி நிச்சயமாக உண்டு.

* அமைதியான இடம், நிசப்த்தமான இடங்கள், நேரங்களில் திடீரென சத்தத்தை உண்டாக்கி திகிலூட்டுவது பேய்களுக்கு பிடித்த விடயம்.

* பேய்கள் ஒளிக்கீற்று, அமானுஷ்யக் கோடுகள், மூடுபனி, புகார், கருநிழல், நிழலுக்குள் நிழல், மங்கலான தெரிவது, கரு உருவம், காற்றுத் தூசிகள், காற்று போன்றவைகள் மூலம் தங்களை வெளிப்படுத்துகின்றன. முழு உருவத்தையும் எப்பொழுதும் வெளிப்படுத்துவது இல்லை. ஆனால் சாத்தியம் உண்டு. சலங்கை சத்தம், பெண்குரல் சிரிப்பு போன்ற சினிமாவில் காண்பிக்க படுபவை கூடுமானவரை கற்பனையே.

* கூட்டமாக வருபவர்களுக்கு பேய்கள் தன்னை வெளிப்படுத்த விரும்புவதில்லை. அதில் ஒரு ஆளை தேர்ந்தெடுத்து அவரை மட்டுமே பின்தொடர்ந்து செல்லும்.

* பேய்கள் குழந்தைகள், அல்லது பெண்கள், ஆண்கள் உடலுக்குள் நுழைய முடியும். பேய்களுக்கு நிறை அதிகம் என்பதால் அவைகளுக்கு நிறைய சக்தி தேவை என்பதால் பீடிக்கப்பட்டவர்கள் அதிகமாக சாப்பிடுவார்கள். நிறைய சக்தியை உறிஞசி விடுவதால் பீடிக்கப்பட்டவர்கள் நாளடைவில் மெலிந்து போவார்கள்.

* பேய்களுக்கு ஞபாக சக்தி அதிகம். வாழும் காலத்தில் நடந்த உணர்வுப் பூர்வமான விடயங்களை , சம்பவங்களை அடிக்கடி நினைத்து பார்க்குமாம். ஆனால், சாவுக்கு காரணமான சம்பவம் தான் அதிகம் நினைவில் நிற்கும். பழிவாங்கும் எண்ணம் ஏற்பட அதுவே காரணமாகும்.

* குழந்தைகள், மிருகங்களால் பேய்களை அடையாளம் காணமுடியும். மிருகங்களின் மீதும் பேய்கள் இறங்கி அவைகளை தாறுமாறாக செயல்பட வைக்க முடியும்.

* பேய்களுக்கு உதவிசெய்யும் குணம் உண்டு. பல சந்தர்ப்பங்களில், குழந்தைகள் முதல் பெரியவர்களை காப்பாற்றி இருப்பதை நீங்களே கேள்விப்பட்டிருப்பீர்கள். பேய் ப்பிடித்தவருக்கே பல சமயங்களில் உதவி செய்த சம்பவங்களும் உண்டு. அவர் குடும்பத்தினரை கூட ஆபத்துகளில் காப்பாற்றியிருக்கிறது. புதையல்கள், கொலைகளில் துப்புகளை கூட காட்டிக்கொடுத்தும் இருக்கின்றனவாம்.

* இருப்பிடத்தை விட்டு வெளியே வராத பேய்களும் உண்டு. ஆனால், அந்த வழியாக யார் வந்தாலும் அவர்களை மட்டும் பயமுறுத்தி வேடிக்கை காட்டும் பழக்கம் பேய்களுக்கு உண்டாம்.

* பேய்கள் இடம்பெயரும்பொழுது பயங்கர காற்று, காற்றுச்சுழல், நீர்நிலைகள் அதிருதல், சுழிகள் உண்டாகுதல், மரங்களை முறித்தல், கதவுகள் தானாக அடிபடுதல் போன்றவை ஏற்படுகின்றன.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும் உண்மை என்றாலும் பயப்பட தேவையில்லை. இவை பேய்களை பற்றி மூட நம்பிக்கையை வளர்ப்பதற்காக எழுதவில்லை. பேய் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவர்கள் பொழுதுபோக்காக படித்து தெரிந்து கொள்ளுங்களேன். மச்சி நான் ஓடிறன்


Read more ...

Thursday, April 9, 2015

பேய்கள் அறிந்தும் அறியாமலும்

மனிதனாகப் பிறந்தால் எல்லாருக்குமே பொதுவாக பேய்களை பற்றி ஒரு திகில் இருக்கும். பேய்களை பற்றி பேசினாலே கண்களை மூடிக் கொள்பவர்கள் நிறையப் பேர். பயமில்லாதது போல் காட்டிக் கொண்டு, பயந்தாங்கொள்ளியாக வீரவேஷம் போடுபவர்கள் பலபேர். எனவே பயப்படாமல், ஜாலியாக பேய்களை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் தெரிஞ்சிக்கலாமா?



* பேய்கள் உறங்குவதில்லை. தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும் வரை அலைந்தபடியே இருக்குமாம்.

* பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே விரும்பும். எனவே தான் அறைகளில் நறுமணம் அல்லது வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன.

* பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காணமுடியும். உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக் கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம்.

* பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல. விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும்.

* பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல விரும்பாதவ்ரகள் தான் கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக சுற்றுவார்களாம்.

* பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள் எதிர்காலம் நன்றாகவே தெரியும். சில நேரங்களில் அவை கனவுகளின் மூலம் வெளிப்படுத்த முயற்சி செய்யும்.

* பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோன உடல்களை சுற்றியோ அல்லது சுடுகாட்டிலோ இருக்காது. எப்பவுமே கோவில்கள், ஆலயங்கள் என வழிபாட்டுத் தலங்களை அண்டியே சுற்றிய படி இருக்குமாம். சிலநேரம் பாழடைந்த கட்டடங்களை அண்டியும் இருக்கும்.

* பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உணர்ச்சிகள் (feelings) உண்டு. ஆனால் உணர (sense) முடியாது.

* பேய்கள் அல்லது ஆவிகள் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அல்லது தன் சாவுக்கு காரணமானவர்களுக்கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக் கொள்ள முயற்சிக்கும்.

* பேய்கள் அல்லது ஆவிகளால் கொலை செய்ய முடியாது. ஆனால் ஒருவன் தன்னைத்தானே கொலை செய்யும் அளவுக்கு தூண்டி விடும் சக்தி உண்டு.

* பேய்கள் அல்லது ஆவிகளால் தரையை கால்களால் தொட முடியும். கைகளாலோ அல்லது உடலின் வேறு பகுதிகளாலோ அல்ல. எனவே தான் உங்களால் அவைகளின் காலடி ஓசையை கேட்க முடியும்.

* பேய்கள் அல்லது ஆவிகளால் ஒரு மனித உடலில் புகுந்து மற்றொருவருடன் தகவல் தொடர்பு கொள்ள முடியும்.

* பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்கள் மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள் வீட்டில் அருகில் இருக்க முடியும்.

* பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோனவரின் உடலை அடக்கம் செய்யும் வரை அவர்களை பற்றி யார் பேசிக்கொண்டு இருந்தாலும் அருகில் நின்று கேட்கும் குணம் உண்டு.

* பேய்கள் அல்லது ஆவிகளை சாதாரணமாக் காணக்கூடியவர்களின் இரத்த பிரிவு (Blood Group) ‘O’ (+) அல்லது O’ (–) ஆக இருக்கும். மற்றவகை இரத்த பிரிவு உள்ளவர்களின் கண்களுக்கு தெரிவது அபூர்வம்.

* குழந்தைகளாக இறந்து போயிருந்தால் பேய்கள் அல்லது ஆவிகள் தேவதைகள் என அழைக்கப்படுவார்கள்.

* பேய்களால் சும்ம இருக்க முடியாது. எப்பொழுதும் தங்கள் மேல் கவனம் இருக்க வேண்டும் என்பதற்காக மற்றவர்களை தொந்தரவு செய்த படியே இருக்குமாம்.

* பேய்கள் எப்போதுமே தாங்கள் இறந்துவிட்டதாக நினைப்பது இல்லை. எதாவது ஒன்றை செய்து தான் இறக்கவில்லை என்பதை நிரூபிக்க முயற்சிக்கும்.

* பேய்கள் பல்வேறு விதங்களில் மனிதர்களுடன் தொடர்புகொள்ளுகின்றன.. கனவுகள், மர்ம குறியீடுகள், தானாக எழுதுவது, சத்தம், புகை, போன்ற பல்வேறுவகையான தந்திரங்களை பயன்படுத்துகின்றன.

* பேய்களுக்கு வாசனை மோப்பசக்தி அதிகம். சில வாசனைகளை அவைகள் நுகர்ந்து அது பிடித்துவிட்டால் அங்கே தன்னை இருக்க வைக்க முயற்சிக்கும். சில வகை பெர்ஃபியூம் வாசனைகளும் ரொம்ப பிடிக்குமாம்.
(தொடரும்....)

மேலும் சுவாரசியமான விபரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இணைந்து இருங்கள் 
Read more ...

Friday, April 3, 2015

வானம் என்ன நிறம் ??

ஏன்? எதற்கு ? எப்படி ? என்ற வினாக்களுக்கு மட்டும் தான்   மூட நம்பிக்கைகளை அழிக்கும் சக்தியிருக்கிறது. இயல்பாகவே இயற்கையின் படைப்பில் பலவற்றில் சந்தேகம் இருக்கிறது.அவற்றில் ஒன்று தான் ஏன் வானம் நீலமாக காட்சியளிக்கிறது?





















சூரியனில் இருந்தோ அல்லது மின்குமிழில் இருந்தோ வரும் ஒளி வெள்ளை நிறமாக இருக்கும் ஆனால் பல நிறங்களை உள்ளடக்கியது. இதனை வானவில்லில் காணலாம். வாயுமண்டலத்தில் ( ATMOSPHERE ) கூடுதலான சதவிகிதம் (78 % நைட்ரஜன், 21 % ஆக்சிஜன் ) வாயுக்களும் மிகுதி நீராவியும் மாசுத்துணிக்கைகளும் உண்டு . அவற்றினூடே ஒளி பூமியை வந்தடைகிறது.

ஒளி அலைகள் வேறுபட்ட அலைநீளத்தை உடையவை. சிவப்பு நிறம் கூடிய அலை நீளம் கொண்டது. நீல நிறம் குறைந்த அலைநீளம் உடையது.

கூடிய அலைநீளம் உடைய ஒளி அலைகள் வந்தடைகின்றன. குறுகிய அலைநீளம் உடைய நீல நிற ஒளி வாயுத்துணிக்கைகளால் உறிஞ்சப்படுகிறது. உறிஞ்சிய துணிக்கைகள் அதை கதிர்க்கின்றன. அவை தெறிப்பு அடைந்து நீல நிறமாக வானம் தோன்றுகிறது.ஒளி காற்று மண்டலத்தில் இடையூறி ல்லாமல் பயணம் செய்தாலும் காற்றிலுள்ள அணு மூலக் கூறுகள் நீர்த்துளிகள் பனிமூட்டம் போன்றவை ஒளியைச் சிதறடிக்கின்றன. சிதறிய ஒளி மேலும் மேலும் சிதறடிக்கப்படுகிறது. இவ்வாறு நடைபெறும் போது மிக அதிகத்துடிப்புடைய நீல நிறம் மிக அதிகமாக சிதறடிக்கப்படுகிறது. (சிவப்பு மிகக்குறைவாக சிதறுகிறது.)

நாம் பார்க்கும் போது அவ் ஒளி அலைகள் கண்ணை வந்தடைகின்றன. அதனாலேயே பகலில் வானம் நீல நிறமாக இருப்பது போல தோன்றுகிறது. வானம் என்பது வெறுமனே வாயுத்துணிக்கைகள், மாசுக்களால், மேலே கூறப்பட்ட ஒளி ஆல் ஆனதே தவிர அப்படி ஒன்று இல்லை என்பதே உண்மை.

பௌதீக விதிப்படி ஒரு நிறத்தின் ஒளி அலைகளின் நீளம் அதிகமா இருந்தா அவை நம் பார்வைக்குக் கிடைக்காமலே போய்விடும்.நீல நிறத்தின் ஒளி அலைகள் குறைவாக இருப்பதால் அது நம் கண்களுக்குள் மாட்டிக் கொள்கிறது.

வானம் நீல நிறமாக இருப்பதால் அதை பிரதிபலிக்கும் கடலும் நீல நிறமாகவே இருக்கிறது. காலைமாலை சூரிய உதயம் அஸ்தமனம் போது மட்டும் அந்தப்பகுதி சிவப்பாக தெரியக்காரணம். சூரியக்கதிர்களில் உள்ள சிவப்பு நிறத்தின் ஒளியலைகளின் நீளம் அப்போ மட்டும் குறைவதுதானாம்!

பூமியின் மேலுள்ள காற்று மண்டலம் தான் காரணம்.சூரிய ஒளி அனைத்து வண்ணங்களையும் உள்ளடக்கியது.வானவில்லில் அது தன் தோகையை விரித்து ஏழு வர்ணங்களைக் காட்டுகிறதே அதனுள் மற்ற வர்ணங்களும் அடக்கம். அவை அனைத்தும் ஒளியே ஆயினும் வர்ண வேறுபாடுகளுக்கு காரணம் அந்த ஒளியின் அலைநீளம் மற்றும் துடிப்பு வானவில்லின் வண்ணங்களில் நீல நிறம் மிக அதிகத் துடிப்புடனும் சிவப்பு மிகக் குறைந்த துடிப்புடனும் இருப்பவை.

நாம் ‘பார்ப்பது’ என்பது ஒளி நமது கண்ணில் வந்து படும்போது மட்டுமே. பார்க்கும் பொருட்கள் எல்லாமே அதில் பட்டு திரும்பும் ஒளி நமது கண்ணை வந்தடைவதால் தான் காற்று மண்டலத்தில் பலமாக சிதறடிக்கப்படும் நீல நிறமே மற்ற நிறங்களை விட பெருமளவில் நமது கண்ணில் வந்து விழுகிறது. ஆகவே தான் வானம் நீல நிறம்.


இரவில் நிலவின் ஒளி நட்சத்திரங்களின் ஒளி ஆகியவை பலம் குறைந்த ஒளியாக இருப்பதால் அந்த சிதறல்கள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. நேராக வரும் ஒளியை மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது.
Read more ...

Wednesday, April 1, 2015

மனித மூளை ஒரு அதிசயம்

இந்த கட்டுரையின் மூலம் மனித மூளை எவ்வாறு நினைவுகளை சேகரித்து வைக்கின்றது என்பதை அறிந்து கொள்வோம்.இது ஞாபக மறதியை தவிர்க்க உதவும் என்று நினைக்கிறேன்.


















மூளை நாம் பார்க்கும், கேட்கும்,உணரும் செயல்களை  மூன்று நிகழ்வுகள் மூலம் சேமித்து கொள்கிறது.அவைகள்,

பதியவைத்தல்:
இதுவே நிகழ்வுகளை நமது நினைவகத்தில் சேமித்தல்  ஆகும். அதாவது, நமது புலங்களான கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தோல் ஆகியவை நமது சுற்றுப் புறத்திலிருந்து தகவல்களை சேகரித்து மூளைக்கு அனுப்புகின்றன.உ+ம்: நமது கண் ஒரு நபரை முதல் முறையாக காணும் பொழுது அவரின் நிறம்,உருவம் ,உயரம் போன்ற தகவல்களை   மூளைக்கு அனுப்பும்.இந்த தகவல்கள் நமது மூளையில் நியூரோன்கள் (neurons) எனும் நரம்பு செல்கள் வழியாக கடத்தப்படும்.இந்த தகவல்கள் ஒரு நரம்பு செல்லில் (neuron) இருந்து மற்றொரு நரம்பு செல் வழியாக பாயும்.அதாவது இரு செல்களின் இடைவெளியை கடக்கும் பொழுது ஒரு வகை வேதியல்  (neurotransmitor) மூலக்கூறு வெளிப்பட்டு இரு நரம்பு செல்களிடையே ஒரு இணைப்பை ஏற்படுத்தும்.இந்த இணைப்பிற்கு சினப்சே(synapse) என்று பெயர். இந்த இணைப்பு உறுதியாகும் பொழுது அந்த நபரை பற்றிய நினைவு உங்கள் மூளையிலிருந்து அகலாது.இந்த இணைப்பு உறுதியாவது ஒரு முறை பார்த்தவுடன் நிகழ்ந்துவிடாது.ஒருநபரை  மீண்டும் மீண்டும் பார்க்கும் பொழுது அவரை பற்றிய தகவல் நாம் நரம்பு செல்களில் உறுதியான இணைப்பாக (synapse) பதிய வைக்கப்படும். இந்த இணைப்பு எந்த அளவுக்கு உறுதி ஆகிறதோ அந்த அளவுக்கு அந்த நபரை பற்றிய நினைவையும் நாம் மறக்காமல் இருப்போம்.
இது அனைத்து விதமான நினைவுகளுக்கும் பொருந்தும். ஒவ்வொரு நினைவுகளுக்கும் ஒரு தனி இணைப்பு (synapse) நம் மூளையில் உருவாகும். இவ்வாறு தான் நாம் படிக்கும் பாடம் , கேட்கும் விஷயம், பார்க்கும் படம் அனைத்துமே நம் மூளையில் பதிய வைக்கப்படும்.  மீண்டும் மீண்டும் படிப் பதன் மூலம் நாம் படித்த பாடமானது ஒரு உறுதியான நரம்பு செல் இணைப்பாக மாறி மறக்காமல் இருக்கிறது.
நினைவகளின் வகைகள்:
இவை மூன்று வகைபடும் ,
1.சென்சாரி
2.ஷார்ட் டைம் மெமோரி
3. லோங் டைம் .
சென்சாரி நினைவுகள் மிக சொற்ப வினாடிகளே நினைவில் இருக்கும்.(உ+ம்) நாம் முதல் முறை கேட்கும்  ஒருவரின் குரல் நமக்கு நினைவில் தங்காது.
ஷார்ட் டைம் மெமோரி எனும் இரண்டாம் வகை நினைவுகள் 30 வினாடிகள் வரை நினைவில் இரு க்கும். (உ+ம்) ஒருவரின் தொலைபேசி என்னை முதல் முறை கேட்கும் பொது அந்த என் உடனேயே எழுதி வைக்காவிடில் மறந்துவிடும்.
லாங் டெர்ம் மெமோரி எனும் நீண்ட கால நினைவுகள் நாம் மூளை நன்றாக செயல்படும் வரை நமக்கு மறக்காது.அதற்கு நாம் செய்ய வேண்டிய ஒன்று அந்த நிகழ்வுகளை நமக்குள் நினைவுபடுத்திக்  கொண்டே இருப்பது.(உ+ம்).உங்களில் பலருக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு வந்து அந்த முதல் காதல் இன்னும் நினைவிருக்கும். இதற்கு காரணம் நீங்கள் ஒவ்வொரு முறை உங்கள் காதலி பற்றி நினைக்கும் போதும் உங்கள் மூளையில்  காதல்  பற்றிய இணைப்பு(synapse) உறுதி ஆகும்.     நீங்கள் ஏதாவது ஒரு நினைவை பற்றி நினைவு கூறாத போதும், நினைக்காத போதும் உங்கள் மூளையில் அந்த விஷயத் திற்கான  பிரேத்தியேக இணைப்பு விடுபடத் தொடங்கும்.இதனால் தான் மறதி ஏற்படுகிறது.
தகவல்களை நினைவுகூறுதல் :
நாம் ஒரு தகவலை நம் மூளையிலிருந்து நினைவுகூரும் பொது அந்த தகவலானது இந்த synapse எனும் நரம்பு செல்களின் இணைப்பு வழியாக தான் ஞாபகத்திற்கு திரும்பி நினைவு கூறுகிறோம். நான் முன்பே கூறியதை போல இந்த இணைப்பு விடுபடும் பொது ஞாபகபடுத்துதல் சிரமமாகும்.இதுவே மறதியின் காரணம்.
இந்த மறதியை தவிர்க்க நாம் மூளையில் சேகரிக்கும் தகவல்களை ஆழமாக பதிய வைக்க வேண்டும். அதாவது பாடம் கேட்கும் பொது அதை கவனமாக கேட்டு மூளையில் பதிய வைக்க வேண்டும். மேலும் அந்த தகவல்களை நமக்குள் சொல்லி பார்த்து கொள்வதால் அந்த தகவலுக்கான இணைப்பு நாம் நரம்பு செல்களில் உறுதியாகி நமக்கு எளிதில் ஞாபகத்தில் இருக்கும்.
முதுமையும் மறதியும்:
மனித மூளையானது சுமாராக 100 பில்லியன்(100*100 கோடி) நரம்பு செல்களை (நியூரான்ஸ்) கொண்டது. நமக்கு 3 வயது ஆகும்போது தான் அந்த செல்கள் முழு வளர்ச்சி அடையும்.இதனால் தான் நமக்கு 3 வயதிற்கு முந்தய ஞாபகங்களை நினைவு படுத்த முடிவதில்லை. 3 வயதில் தான் நாம் அதிக எண்ணிக் கையிலான நரம்பு செல்களை கொண்டிருக்கிறோம். 3 வயது குழந்தைக்கு நாற்பது மொழிகள் கற்றுக் கொள்ளும் திறன் இருப்பதாக நான் கேள்விப்  பட்டு இருக்கிறேன். இதுவே அதற்கு காரணம். நாம் இருபது வயதுகளை கடக்கும் போது நமது மூளையில் உள்ள  இந்த நரம்பு செல்கள் குறைய தொடங்கி நாம் என்பது வயதை எட்டும் போது  சுமாராக இருபது சதவீத நரம்பு செல்களை இழந்திருப்போம். மற திக்கு இது ஒரு காரணம் என்று கூறலாம்.
இருப்பினும் நாம் மீதமுள்ள நரம்பு செல்களை கூட நமது வாழ்நாளில்  முழுவதுமாக பயன்படுதுவது இல்லை.இந்த இருபது சதவீத செல்களின் இழப்பு ஒரு குறை ஆகாது. நம்மில் பலர்  முதுமை வந்த பிறகு நமது நடவடிக்கைகளை குறைத்து கொள்கிறோம். நமது சிந்தனையையும் குறைத்து கொள் கிறோம். இதனால் நாம் நினைவு கூறாத விஷயங்களுக்கு உரிய இணைப்புகள் நம் மூளை செல்களில் விடுபடுகின்றன. இதுவே மறதிக்கு முக்கிய காரணம். நாம் முதுமையிலும் நம் மூளைக்கு சவாலான செயல்களை கொடுத்து கொண்டே இருந்தால் நம் மூளை முதுமையிலும் இளமையாக செயல்படும்.
Read more ...

விஞ்ஞானம்

தொழில்நுட்பம்

தொலைபேசி

கணினி தகவல்கள்

மர்மங்கள்

Designed By Knowledge Drive